ஆகஸ்டில் காஷ்மீருக்குக் காந்தி விஜயம் செய்தார். சில தினங்களில் அங்கிருந்து பஞ்சாபுக்குப் புறப்பட்டுவிட்டார். பஞ்சாபில் வகுப்புக் கலகம் மும்முரமாக இருந்தது. இஸ்லாத்தைத் தழுவுவதா அல்லது இறப்பதா என்ற நிலைமை காரணமாக ஏராளமான பேர் மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக ஓடிவந்த கொண்டிருந்தனர். அவர்களுக்குக் காந்தி கூறிய புத்திமதி வருமாறு:- "மேற்கு பஞ்சாபிலிருந்து ஜனங்கள் குடிபெயர்ந்துவருகிறார்கள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். லாகூர் இறந்துவிட்டதென்றோ, இறந்து கொண்டிருக்கிறதென்றோ நீங்கள் கருதினால் அங்கிருந்து ஓடிவராமல், செத்துக் கொண்டிருக்கும் அந்நகரத்துடன் நீங்களும் சேர்ந்து சாக வேண்டும்" |